அமைதிப்பூங்கா விதிமுறைகள்

  1. இறந்தவரின் மருத்துவர் சான்றிதழ் ஒரிஜினல் - 1
  2. இறந்தவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
  3. இறந்தவரின் ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஜெராக்ஸ் - 1
  4. பதிவு செய்தவருடைய ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஒரிஜினல் காண்பிக்க வேண்டும்.
  5. இறந்தவரின் சொந்தங்கள் 4 நபர்கள் ஆதார் கார்டு ஒரிஜினல் காண்பிக்க வேண்டும்.
  1. காலை 7.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை எரியூட்டும் மயானம் செயல்படும்.
  2. ஆம்புலென்ஸ் 15 கிலோ மீட்டர் வரை சென்று எடுத்து வந்து எரியூட்டும் கட்டணம் ரூ. 3,000/-
  3. ஆம்புலென்ஸ் 15 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் கிலோ மீட்டருக்கு ரூ. 20 கூடுதலாக கட்ட வேண்டும்.
  4. மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை எரியூட்டும் கட்டணம் ரூ. 6,000/-
  5. இரவு 9.00 மணிக்குமேல் எரியூட்டும் பணி நடைபெறாது.
  1. இறந்தவரின் உடல் எரியூட்ட வரும்போது மெத்தை, தலையணை மற்றும் இதர பொருட்களை ஆம்புலென்ஸில் கொண்டு வரக்கூடாது.
  2. இறந்தவரின் அஸ்தியை கரைக்கவும், குளித்துவிட்டு காரியங்கள் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
  3. அமைதிப்பூங்காவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கண்டிப்பாக சன்மானம் கொடுக்கக்கூடாது.
  4. அமைதிப்பூங்காவிற்கு நன்கொடை கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தில் நன்கொடை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும்.
  5. குளிர்சாதனப் பெட்டி இங்கு கிடைக்கும். ஒரு நாள் வாடகை (24 மணிநேரம்) ரூ. 1,500/- வண்டி வாடகை ரூ. 1,000/- (15 கிலோ மீட்டருக்குள்), 15 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் கிலோ மீட்டருக்கு ரூ. 20/-

பதிப்புரிமை © அமைதிப்பூங்கா டிரஸ்ட்